கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு செல்லும் விமானங்கள் மற்றும் பஜ்ரைன், குவைத், கோலாலம்பூர், பாரிஸ் புறப்படும் சர்வதேச விமானங்கள் புறப்படுவதிலும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.