‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.06 கோடி பேருக்கு தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ரூ.1,000 பெற இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை நாளை (திங்கள்கிழமை) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம். மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.