சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிப்பர், கண்டெய்னர் மற்றும் மினி வேன் ட்ரான்ஸ்போர்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் ஆறாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.