ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் நில அதிர்வு ஆய்வு மையம், சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை. மிக குறுகிய இடத்திற்கு மட்டும் நில அதிவு உணரப்படாது. அப்படியிருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது.