மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல் 3 ஆம் தேதி வரையும் முற்றிலும் ரத்துசெய்யப்படுகிறது. மதுரை-கோவை ரயில்(16722) மார்ச்-6ம் தேதி முற்றிலும் ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகமானது அறிவித்துள்ளது.