சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக இந்த வருடம் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

இந்த துறையில் உள்ள வல்லுநர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் சகத் தொழில் துறையை சேர்ந்தவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து வர்த்தக பார்வையாளர்கள் மற்றும் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் make in India and made in India நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.