கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் விளைவால் கடந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் ஏப்., 17 முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் அன்றைய தினம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரசார வாகனம் இயக்கப்பட உள்ளது. இந்த வாகனத்தில் அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட பல விளக்கங்கள் இருக்கும்.