சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மற்றும் மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், திருப்பதி சப்தகிரி மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல் மற்றும் திருப்பதி கருடாதிரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், பெங்களூரு மற்றும் சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், கோவை மற்றும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா மற்றும் சென்ட்ரல் வந்தே பாரத், கோவை மற்றும் சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரயில்களும் மேலும் 15 ரயில்கள் என மொத்தம் 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.