தமிழகம் முழுவதும் நாளை முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் வெள்ள பாதிப்பு சீரானவுடன் நான்கு மாவட்டங்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.