சென்னையில் தினம் தோறும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக சுமார் 6000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலை விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் இனி ஒளிரும் ஆடை கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மேலும் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மின்விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே வாகன சோதனையை நடத்த வேண்டும். சாலையில் மூன்று அடுக்குகளில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.