சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் மற்றும் அரக்கோணத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி இன்று இயக்கப்படும் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு இன்று காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். இந்த ரயில் மறு மார்க்கமாக திருமால்பூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட சென்னை கடற்கரையை வந்தடையும்.

அதனைப் போலவே சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு பகல் ஒரு மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும் எனவும் மறு மார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.