சென்னையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய CM மு. க ஸ்டாலின், நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும், தமிழ்நாட்டில் இருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம்.

சென்னையின் செல்லப் பிள்ளை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என பேசியுள்ளார். மேலும், இந்நிகழ்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.