அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இன்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற எண்ணம்தான் சந்திக்க வைத்திருக்கிறது. அரக்கர்கள் போல செயல்படுபவர்களிடம் இருந்து கட்சியை மீட்போம் என்று கூறினர்.

அப்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய டிடிவி, ஒன்று பாஜக, அல்லது காங்கிரஸ், இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம். எடப்பாடி துரோகி எனில், திமுக எதிரி என்று பதிலளித்தனர்.