நாடு முழுவதும் மருத்து படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில், சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையில் இரும்புக் கொக்கி இருந்ததால், அவரது உள்ளாடையைக் கழற்றிவிட்டு தேர்வு எழுதுமாறு தேர்வு அறை கண்காணிப்பாளர் வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒங்கிணைப்பாளர் சீமான், “நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொல்லிய நபர்கள் மீது நடவடிக்கை தேவை. நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.