தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யும் உத்தரவை ஆர். என் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் இந்த உத்தரவை தற்போது நிறுத்தி வைத்துள்ளார்.