அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் மனு மீதான வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா? சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் ஜாமீன் மனு தொடர்பான வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த தினம் உத்தரவிட்டிருந்தது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.