தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சிறை பிரபலங்கள் பதிலளித்து வரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா நச் என்று பதில் அளித்துள்ளார். அதாவது, நான் சூர்யாவின் 15 வருட ரசிகை. ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வருவது போல சூர்யாவை எனக்கு ஒரு நாள் கடன் தருவீர்களா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.