சின்னத்திரையில் தொகுப்பாளராக வளம் வந்து ஏராளமான ரசிகர்களை கொள்ளையடித்தவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் தனது நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். தற்போது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட டிடி அதிக நேரம் இருக்க முடியாத நிலையில் உள்ளார்.

இருந்தாலும் சாரில் அமர்ந்து கொண்டு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிடி கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சூப்பர் சிங்கர் மேடையில் பாடகர் பிரதீப் தலைகோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் என்ற பாடலை பாடத் தொடங்கியதும் டிடி எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.