தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் சதீஷ். சேலத்தை சேர்ந்த இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த முதல் படமான நாய் சேகர் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்யக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன் என்று நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படம் குறித்து பேசிய அவர், “உருவ கேலி செய்வதை இப்போதெல்லாம் ரசிகர்கள் விரும்புவதில்லை. நகைச்சுவை நடிகன் நல்ல பன்ச் லைன்களை சொல்ல வேண்டும். சொன்னதையே சொல்லாமல் புதியதாக சொல்ல வேண்டும். வார்த்தையால் பிறர் மனதை நோகடிக்கக் கூடாது” என்றார்.