மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய உத்தரவு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வீட்டு வாடகைப்படி உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதால் வீட்டு வாடகை படி மற்றும் மற்ற சலுகைகளில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அரசு ஊழியர்கள் வசிக்கும் இடங்கள் X, Y, Z என்ன மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வீட்டு வாடகைபடியானது உயர்த்தப்படும். மேலும் இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.