மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் திணை வகைகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து சிறுதானிய வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டம் முதலில் புனேவில் உள்ள புரந்தாரா தாலுகாக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 7 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்த அரசு விரைவில் ஆலோசனை நடத்தி மாநில முழுவதும் திட்டத்தை விரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.