எம்பி ராகுல் காந்தி தனக்கு பிடித்த உணவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உணவு விஷயத்தில் நான் பிடிவாதமானவன் கிடையாது, என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிடுவேன். ஆனால் பட்டாணி, பலாப்பாழம் ஆகியவை மட்டும் எனக்கு பிடிக்காது. அதேநேரம் நான் அசைவம் சாப்பிடுவேன்.

சிக்கன், மட்டன், கடல் உணவுகள் பிடிக்கும். சிக்கன் டிக்கா, கெபாப்ஸ், ஆம்லேட் ஆகியவை பிடிக்கும். காலையில் ஒரு கப் காபி குடிப்பேன். வீட்டில் இருந்தால் உணவு கட்டுப்பாட்டில் தீவிரமாக இருப்பேன். வீட்டில் இந்திய உணவு வகைகளையே சமைப்பார்கள் என்றார்.