நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதற்காக சென்னையில் மட்டும் ஒன்பதாயிரம் காவலர்களும் தமிழ்நாடு முழுவதும் 40000 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.