நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக தற்போது ஜியோ நிறுவனம் அனைத்து மூலை முடுக்குகளிலும் நெட்வொர்க் கிடைக்கும் சிறந்த நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதிவேக 5G இணையத்தை நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்காக பண்டிகை காலம் சிறப்பு நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு சலுகைகளை பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.

அதன்படி  இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜியோ நிறுவனம் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 2999 ரூபாய் கட்டணமாக செலுத்தி 2.50 ஜிபி டேட்டாவை தினமும் பயனர்கள் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இதனுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு ஓடிடி தளங்களுக்கான அனுகள் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.