விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பப் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தா குழந்தையுடன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட எழில் அவரை காதலித்து பல இன்னல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை ஏற்றுக் கொண்ட நிலையில் மறுபக்கம் பாக்கியாய் இனியாவின் கல்லூரியில் டூர் கேரளாவிற்கு சென்று உள்ளார்.

பாக்கியாவை கால் செய்து கோபி அடிக்கடி திட்டி வருகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கோபியில் இன்ஸ்டா கணக்கை கண்டுபிடித்து கேவலமாக கமெண்ட்களை வாரி இறைத்து திட்டி வருகிறார்கள். இதனை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத கோபி சினிமாக்காரர்கள் நாலு காசு பார்ப்பதற்குள் எத்தனை பேச்சு வாங்க வேண்டி இருக்கு என்றும் மிகவும் கவலையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த இணையவாசிகள் கோபி சீக்கிரமாக சீரியலை விட்டு ஓடி விடுவார் என கூறி வருகிறார்கள்.