சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் கனிஷ்கா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தரைமட்டமான பட்டாசு ஆலையின் கட்டிட இடிப்பாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.