சமூக வலைதளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் தற்போது ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான காணொளி வைரலாகப் பரவி வருகிறது. மெஸ்ஸியின் கால்பந்து ஆட்டத்தின் மீதுள்ள தங்களது மகிழ்ச்சியைச் சிறுவர்கள் சிலர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் குழுவில் இருந்த ஒரு சிறுவன் திடீரென கால்பந்து பேச்சிலிருந்து விலகி, “காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேட் என்றால் ரேவந்த் ரெட்டி லாஸ்” என்று சத்தம் போட்டு முழக்கமிட்டான்.

​சிறுவனின் இந்தக் கூற்றைக் கேட்டவுடன், அருகில் இருந்த ஒரு நபர் உடனடியாக அந்தச் சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டார். கால்பந்து ரசிகர்கள் மத்தியில் திடீரென அரசியல் முழக்கத்தை எழுப்பிய இந்தச் சிறுவனின் காணொளி, தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.