தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொண்டையில் லாலிபாப் மிட்டாய் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம் கமேபள்ளி பகுதியை சேர்ந்த லகவத் கிருஷ்ணா மற்றும் சுனிதா தம்பதியினர் இசிஎல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் கௌதம் (10) கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.

அங்கு கடையில் லாலிபாப் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அது தொண்டையில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.