தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். சிறார் திருமணங்களை தடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். கொரோனா காலகட்டத்தில் குழந்தை திருமணம் அதிகரித்த நிலையில் தற்போதும் தமிழகத்தில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.