தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர் ஒருவரை கருணாஸ் முட்டாப் பயலே என்று திட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், எடப்பாடி முதல்வர் ஆக ஓட்டு போட்டவர் நீங்கதானே என்றார். அதற்கு சின்னம்மா போட சொன்னாங்க என்று பதில் அளித்த கருணாஸ், திடீரென முட்டாப் பயலே என்று திட்டினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.