மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எத்தனை வருடமாக வெளிநாட்டுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி தேர்தல் வந்துவிட்டால் மட்டும் இந்தியாவுக்கு டூர் அடிப்பார்.

ஏதோ அவர் ஷோ காட்ட வருவார் என்று நான் சொல்லவில்லை. அவரோடு ரோடு ஷோ என்ற பெயரில் ஒன்றை நடத்தி வருகிறார். அப்படி சென்னையில் மோடி ரோடு ஷோ நடத்தினார்.? அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? அது என்ன மாதிரி இடம் என்று தெரிந்துதான் போனீர்களா அது திராவிட கோட்டை. அங்கே உங்களுடைய ஷோ எல்லாம் எடுபடுமா? உங்களுடைய ஷோ பிளாப் ஷோவாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.