நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் மட்டுமின்றி சிலிண்டர் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சமீப நாட்களாகவே தக்காளி விலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையும் கடும் உயர்வை சந்தித்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளது. மல்ட்டிபிளக்ஸ் AC தியேட்டரில் டிக்கெட்டை 250ஆக உயர்த்த வேண்டும் என்றும் மல்ட்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டரில் 150ஆக உயர்த்த வேண்டும் எனவும், நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சிகளில் AC தியேட்டர்களில் 100லிருந்து 200 ஆக உயர்த்தவும், ACஇல்லாத தியேட்டரில் 120ஆக உயர்த்தவும் கோரியுள்ளனர்.