சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பிறகு இவர் பள்ளி கல்லூரி பயின்று முடித்து 1981 ஆம் ஆண்டு முதல் மௌனமடத்தின் மாடாதிபதியானார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்