சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அந்த வீடியோவில் சிங்கங்கள் தண்ணீருக்குள் நிற்கிறது. அப்போது ஒரு காட்டெருமையின் வாய்க்குள் ஒரு சிங்கம் சிக்கிக்கொண்ட காட்சியை பார்க்க முடிகிறது. காட்டெருமையின் பிடி உடும்புப் பிடியாக இருக்க, கழுத்தை எதிரியின் வாய்க்குள் கொடுத்த சிங்கத்தின் நிலை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தன்னுடைய கூட்டாளி சிக்கிக்கொண்டதைப் பார்க்கும் மற்றொரு சிங்கத்துக்கு மூளை வேலை செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.