ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.