இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. சாலையை மறு சீரமைத்தல், பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கு புதிய இல்லம், அலுவலகம், துணை ஜனாதிபதிக்கு புது இல்லம் போன்றவை கட்டுவதும் “சென்டிரல் விஸ்டா” மறுசீரமைப்பு திட்டத்தில் அடங்கும்.

இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். குடியரசு தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும். அதுதான் சரி என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்