கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தில் கிருஷ்ணவேணி சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணவேணி ஆனைமலை வட்டம் கோட்டூர் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு இரண்டு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணவேணியின் மரணத்திற்கு 25 ரூபாய் நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.