சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் சென்றார். அவரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தியை வரவேற்பதற்காக அவருடைய கட்சி ஆதரவாளர்கள் பிரியங்கா காந்தி செல்லும் வழி முழுவதும் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் ரோஜா இதழ்களால் நிரப்பினர். மேலும் அந்த பாதையில் பிரியங்கா காந்தி நடந்து சென்றார்.