மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்துள்ளது.

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.