மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கப்டி, மகாஜன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வாசிப்பது மட்டுமல்லாமல் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இவர்கள் கடந்த ஜூலை 30 அன்று பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மகாஜன் கப்டியை கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கப்டி விளையாட்டில் இருந்து வெளியேறியதோடு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

அங்கு கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுத்துக்கொண்டு கப்டி மகாஜன் வீட்டிற்கு வந்து அவரை சரமரியாக தாக்கியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட மகாஜன் வீட்டில் இருந்தவர்கள் கப்டியை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதையடுத்து தோள்பட்டை மற்றும் வயிற்று பகுதியில் ரத்தக்காயம் அடைந்த மகாஜனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் கப்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.