தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே இருக்கும் குடியிருப்பில் சூசைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புஷ்பராணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் புஷ்பராணி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து உணவு கொண்டு சென்ற அவரது மகள் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக புஷ்பராணியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெந்நீர் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த போது சேலையில் தீப்பிடித்து புஷ்பராணி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.