நாங்குநேரியில் ஜாதிய ரீதியான மோதலில் தாக்குதல் நடத்தப்பட்டு சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஜாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக்கூடாது.

அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது. சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள் ஆன கல்விக்கூடங்களிலேயே ஜாதி தலை தூக்குவதை பொறுத்து கொண்டிருக்க முடியாது . ஜாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும் எனவும் அதற்கு பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம் எனவும் வைரமுத்து கூறியுள்ளார்.