ஹரியானா மாநிலம் கூர்கான் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பகத் குமார். இவருடைய இரண்டு வயது குழந்தை கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த 50 அடி ஆழ சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணாமல் தேடியே பெற்றோருக்கு சிறிது நேரத்திற்கு பின்னர் தான் சாக்கடையில் விழுந்தது தெரியவந்துள்ளது.

அதன் பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் அலட்சியம் காட்டியதால் தான் இந்த இறப்பு நடந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.