தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை மற்றும் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே மற்றும் பசி ஆகிய படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.