தமிழ் சினிமாவில் ஜெயம், அந்நியன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சதா. இவர் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு தற்போது 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக நடிகை சதா தற்போது பேசியுள்ளார்.

அதாவது திருமணம் செய்து கொண்டால்  சுதந்திரம் பறிபோய்விடும் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது தனியாக இருந்தால் சுதந்திரமாக நாம் விரும்பியபடி வாழ முடியும். ஆனால் திருமணம் செய்து கொண்டால் ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவோம். எனவேதான் 40 வயதாகியும் இன்னும் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார்.