கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமண் சவடி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய உள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி காங்கிரஸியில் இணைந்து வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் துணை முதல்வருமான லட்சுமண் சவடியும் காங்கிரஸில் இணைய உள்ளதாக டி கே சிவக்குமார் அறிவித்துள்ளார்.