அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் வழக்கில் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கஉத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனால், அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதை பொறுத்தே இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆவாரா என்பது தெரியவரும். இது இபிஎஸ்-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.