அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த தீர்ப்பு பொன்முடிக்கு எதிராக வரும்பட்சத்தில், அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இது திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும்