நடிகர் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  திரிஷா சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இணைத்து நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷாவை தொடும்படி ஒரு சீனும் இல்லை என்று கவலையாக ஒரு இடத்தில் பேசியிருப்பார். இது பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில் த்ரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மீது போலீஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என த்ரிஷா ஒரு கடிதம் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்தி வரலாகி வருகிறது. அதாவது சர்ச்சை பேச்சுக்காக மன்சூர் அலிகான் இடம் விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராக காவல்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து த்ரிஷா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் காவல்துறை உட்பட ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.