பிரபல பாலிவுட் நடிகை ஈஷா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஷா குப்தா 2012 இல் ஜன்னத் 2 திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். சமீபத்தில், அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்திற்கு ஹைபர்பேரிக் தெரபி என தலைப்பிடப்பட்டிருந்தது.

‘மயோசிடிஸ்’ என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா முன்பு இதே சிகிச்சையை மேற்கொண்டார். இது தசை அழற்சி மற்றும் தொற்றுநோயைக் குறைக்கிறது. இதன் மூலம் ஈஷாகுப்தாவுக்கும் மயோசிட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது இணையத்தில் வதந்தி பரவி வருகிறது.